கொரிந்து சபைக்கு கிறிஸ்து யார்?
கொரிந்து சபைக்கு கிறிஸ்து யார்?
⭕1. பஸ்காவாகிய கிறிஸ்து
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியர் 5.7
⭕2. அஸ்திபாரமாகிய கிறிஸ்து
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
1 கொரிந்தியர் 3.11
⭕3. கன்மலையாகிய கிறிஸ்து
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1 கொரிந்தியர் 10.4
⭕4. முதற்பலன் கிறிஸ்து
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15.23
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
1 கொரிந்தியர் 15.20
⭕5. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து.
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமயும் இருக்கிறார்.
1 கொரிந்தியர் 1.23
⭕6. தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிற கிறிஸ்து..
ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
1 கொரிந்தியர் 1.25
Comments
Post a Comment