அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA
அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக்
@ kvpm CBA
♥️தியான வசனம்...
(பர்னபா)
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
அப்போஸ்தலர் 11:23
தேவ கிருபையை கண்டார்கள்
அந்தியோகியா சபை ஆரம்பிக்க காரணமாக இருந்தவர்கள்..
🌍1. அறியப்படாத நபர்களால் ஆரம்பமானது v 11:19,20
🌍2. ஆத்ம பாரம் உள்ள நபர்களால் ஆரம்பமானது v 11:19,20
🌍3. இன்னல்கள் நிறைந்தவர்களால் ஆரம்பமானது v 11:19,20
தேவ கிருபையை கண்ட போது..
அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள்
♥️1. சுவிசேஷத்தை அறிவிக்கிற சபை..
அப் 11:20
சுவிசேஷமே இரட்சிப்புக்கு வாசல்..
அநேகர் சுவிசேஷத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டு சபைக்குள் வருவதில்லை..
சுவிசேஷம் அறிந்து இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே சுவிசேஷத்தை அறிவிக்க முடியும்.
♥️2. நற்சாட்சி உள்ள சபை
அப் 11:26
எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.
2 கொரிந்தியர் 3:2
அப் 2:42
சொல், செயல், நடத்தை சாட்சியின் முக்கியத்துவம்
♥️3. கர்த்தருடைய வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற சபை ♥️
அப் 11:23,26
எபே 5:23-33
வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான். அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
நெகேமியா 8:4
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான். அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
நெகேமியா 8:5
அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள். அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது. பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
நெகேமியா 9:3
♥️4. ஆவிக்குரிய வரங்கள் உள்ளவர்களை பயன்படுத்தும் சபை
அப் 11:25
அடுத்த தலைமுறை யை உருவாக்கும் சபை..
பவுலும் பர்னபாவும் - 6 times
பர்னபாவும் பவுலும் - 6 times
♥️5. தாராளமாக கொடுக்கின்ற சபை
அப் 11:29,30
♥️6. உபவாசித்து ஜெபிக்கிற சபை
அப் 13:1,2
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
அப்போஸ்தலர் 13:1
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது; பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 13:2
அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 13:3
அப்போஸ்தலர் நடபடிகளில் ஜெபத்தின் முக்கியத்துவம்..
@ ஜெபம் ஆரம்பம் 1:13,14
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள். அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 1:13
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 1:14
@ ஜெபம் அடிப்படை உபதேசம் அப் 2:42
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 2:41
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:42
@ ஜெபம் அனுதின வாழ்கை அப் 3:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:1
@ ஜெபம் ஆறுதல் அப் 4: 31-37
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
அப்போஸ்தலர் 4:31
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
அப்போஸ்தலர் 4:32
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள், அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
அப்போஸ்தலர் 4:33
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
அப்போஸ்தலர் 4:34
அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
அப்போஸ்தலர் 4:35
சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
அப்போஸ்தலர் 4:36
தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
அப்போஸ்தலர் 4:37
@ ஜெபம் அதி முக்கியம் அப் 6:1-5
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:1
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல.
அப்போஸ்தலர் 6:2
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
அப்போஸ்தலர் 6:3
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 6:4
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
அப்போஸ்தலர் 6:5
@ ஜெபம் அடையாளம் அப் 9:11
தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி; அனனியாவே, என்றார். அவன்; ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.
அப்போஸ்தலர் 9:10
அப்பொழுது கர்த்தர்; நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய் யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்.
அப்போஸ்தலர் 9:11
@ ஜெபம் அவசியம் அப் 12:1-5
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி.
அப்போஸ்தலர் 12:1
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
அப்போஸ்தலர் 12:2
அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
அப்போஸ்தலர் 12:3
அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளிலே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
அப்போஸ்தலர் 12:4
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 12:5
EM Bounds..
ஜெபம் இல்லாததினாலே நரகத்தின் எல்லை விசாலமாகிறது..
♥️7. தேவ சித்தத்துக்கு அல்லது ஆவியின் நடத்துதலுக்கு செவி கொடுக்கிற சபை
அப் 13:1-2
@ evgvivek
@ kvpmCBA
Comments
Post a Comment