♥️♥️♥️♥️♥️♥️♥️ "பிரவேசித்தல்" ♥️♥️♥️♥️♥️♥️♥️ 💯TCBA SALVATION MOMENT💯


♥️♥️♥️♥️♥️♥️♥️

      "பிரவேசித்தல்" 

♥️♥️♥️♥️♥️♥️♥️

     💯TCBA SALVATION 
            MOMENT💯

♥️♥️♥️♥️♥️♥️♥️

"பிரவேசித்தல்" என்பது இரட்சிப்பின் திட்டத்தில் மிக கவனத்துக்குரிய பதம் ஆகும் 

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

🌍1. 
பேழை கிறிஸ்து..
கிறிஸ்துவில் பிரவேசிப்பதே இரட்சிப்பு 

💯கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். ஆதியாகமம் 7.1

💯நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 10.9

🌍2. 
பரிசுத்த ஸ்தலம்..நம் ஆவி ஆத்துமா சரீரம்..மகா ஆசாரியர் கிறிஸ்து பிரவேசிப்பது நம் பரிசுத்தமாகுதலுக்கு நிழல்..

💯ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.
 யாத்திராகமம் 28.29

🌍3. 
கிறிஸ்து பாவம் நிறைந்த உலகுக்கு பிரவேசித்தல் இந்த உலக இரட்சிப்புக்கு ஆதாரம்..

💯அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், லூக்கா 19.1

🌍4. 
கிறிஸ்து இவ்வுலகில் பிரவேசித்து இரட்சிப்பின் திட்டம் முடித்து மறுபடியும் மகிமையில் பிறவேசித்தார்..

💯கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 
லூக்கா 24.26

 🌍5. 
தேவனுடைய கோபமும் மனிதனுடைய அவிசுவாசமும், பின்வாங்குதலும் இரட்சிப்புக்குள் பிரவேசிக்க இயலாது..

 💯என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார். 
எபிரேயர் 3.11

💯ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.
எபிரேயர் 3.19

💯ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம். 
எபிரேயர் 4.1

===================

🪜எபிரேயர் நிருபத்தில் "பிரவேசித்தல் " என்பதின் முக்கியத்துவம்..

🍒1. 
கிறிஸ்துவை தேவன் இவ்வுலகில் பிரவேசிக்க திட்டம் கொண்டார்..சரீரம் ஆயத்தம் செய்தார்..

💯மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
 எபிரேயர் 1.6

💯ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். எபிரேயர் 10.5

🍒2. 
கிறிஸ்து நித்திய பிரதான ஆசாரியராக முன்னோடியாக பிரவேசம்..

 💯நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். 
எபிரேயர் 6.20

🍒3. 
பிரவேசித்தலின் பிரமாணம்..

 💯இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். எபிரேயர் 9.6
 இரண்டாங்கூடாரத்தில் பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். 
எபிரேயர் 9.7

🍒4. 
கிறிஸ்துவின் பிரவேசம் நித்திய மீட்பு..

 💯வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். எபிரேயர் 9.12

🍒5.  
கிறிஸ்து இரட்சிப்பின் திட்டம் நிறைவேற்றி மகிமையில் பிரவேசித்தார்..

💯அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்தில்தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
 எபிரேயர் 9.24

🍒6. 
கிறிஸ்து தம்முடைய சரீரம், தம்முடைய இரத்தம்..
இது நித்திய விசேஷத்த பிரவேசம்..

 💯பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. எபிரேயர் 9.25

🍒🍒🍒🍒🍒🍒🍒

🌺 
நம் இரட்சிப்பின் முழு திட்டம் நாம் கிறிஸ்துவில் பிரவேசிப்பது மட்டுமே..

இந்த இரண்டு வசனங்கள் கவனியுங்கள்..

💯ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 
எபிரேயர் 10.19-20

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

இரட்சிப்பின் அழைப்பும் சுவிசேஷ மணித்துளியும்..

💯இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளிப்படுத்தினத விசேஷம் 3.20

🌸விசுவாசியுங்கள்.
பிரவேசியுங்கள்.
இரட்சிக்கப்படுங்கள்

🏹கர்த்தர் உங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவாராக..ஆமென் 

🤝🤝🤝🤝🤝🤝🤝

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
டூவிபுரம் 3
தூத்துக்குடி 628 003

shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

🤝🤝🤝🤝🤝🤝🤝

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA