♥️♥️♥️♥️♥️♥️ஆதி திருச்சபையில் ஜெபத்தின் மேன்மை ♥️♥️♥️♥️♥️♥️CFCM THIRUVARUR BIBLE STUDY
சகோதரி
joshua, josna
சகோ அருள் செல்வன்
சகோதரி
blessy
சகோ david
சகோதரி
blessy
blessy
சகோ wellington
சகோதரி ஜீவ கனி
paul
சகோ எட்வின்
சகோதரி
♥️♥️♥️♥️♥️♥️
ஆதி திருச்சபையில் ஜெபத்தின் மேன்மை
♥️♥️♥️♥️♥️♥️
CFCM THIRUVARUR BIBLE STUDY
♥️♥️♥️♥️♥️♥️
🍒1. ஜெபம் சபைக்கான ஆயத்தம்..ஆரம்பம்..
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 1:14
🍒2. ஜெபம் உபதேசம் ( நான்கு சபை அஸ்திபாரங்களில் ஒன்று )
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:42
🍒3. ஜெபம் அனுதின வாழ்க்கை முறை..
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:1
🍒4. ஜெபம் சபையின் வல்லமை..சாட்சி..
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
அப்போஸ்தலர் 4:31
🍒5. ஜெபம் சபையின் இன்றியமையாமை..
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 6:4
🍒6. ஜெபம் ஊழியரை உறுதி செய்கிறது..
அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:6
🍒7. ஜெபம் பரிசுத்த ஆவியின் அஸ்திபாரம்..
அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 8:16-17
🍒8. ஜெபம் விசுவாசிகளின் அடையாளம்..
அப்பொழுது கர்த்தர்; நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய் யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்.
அப்போஸ்தலர் 9:11
🍒9. ஜெபம் சபையை உயிர்ப்பிக்கிறது..
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி; தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.
அப்போஸ்தலர் 9:40
🍒10. ஜெபம் பய பக்தியின் வெளிப்பாடு..
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர் 10:2
🍒11. ஜெபம் தேவனை நினைப்பூட்டுகிறது..
அவனை உற்றுப்பார்த்து, பயந்து; ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன் உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
அப்போஸ்தலர் 10:4
🍒12. ஜெபம் குறிப்பிட்ட வேளையில் தேவனிடம் நெருங்க செய்கிறது..
மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.
அப்போஸ்தலர் 10:9
......தொடரும்..
CFC MINISTRIES
THIRUVARUR
@tcbashalom:tuticorin
🍒🍒🍒🍒🍒🍒🍒
Comments
Post a Comment