♥️♥️♥️வாலிபர்களே நீங்கள் பெலவான்கள்..♥️♥️♥️
வாலிபர்களே நீங்கள் பெலவான்கள்..
♥️1.கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்,
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
சங்கீதம் 29.1
♥️2. கர்த்தரே வாலிபர்களின் வாழ்க்கையில் ஒப்பிட முடியாத ஆண்டவர்..
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? சங்கீதம் 89.6
♥️3. வாலிபர்களாகிய பலவான்கள் கர்த்தருடைய கொள்ளைப் பொருள்
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53.12
♥️4. வாலிபர்கள் உள்ளத்தில் தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறது அவசியம்..
♥️5. வாலிபர்கள் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்..
பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும்,
நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
1 யோவான் 2.14
♥️6. வாலிபர்கள் பலவானாகிய கர்த்தருடைய கரத்தில் அம்புகள்..
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 127.5
Comments
Post a Comment