இயேசு கிறிஸ்து பிறப்பில் நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்..


இயேசு கிறிஸ்து பிறப்பில் நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்..

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் நிறைவேறிய 5 முக்கிய தீர்க்கதரிசனங்கள்: 

🌺கன்னிப் பிறப்பு (ஏசாயா 7:14), 

🌺பெத்லகேமில் பிறப்பு (மீகா 5:2),

🌺 தாவீது அரசரின் வம்சாவளி (எரேமியா 23:5-6, ஏசாயா 11:1),

🌺 ஆபிரகாமின் சந்ததியில் பிறப்பு (ஆதியாகமம் 22:18), மற்றும்

🌺 எகிப்திலிருந்து திரும்ப அழைக்கப்படுதல் (ஓசியா 11:1) ஆகியவை.

 இந்தத் தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன, அவை இயேசுவின் பிறப்பில் நிறைவேறியதாக விவிலியம் கூறுகிறது. 


♥️1. ஆபிரகாமின் சந்ததி (Seed of Abraham):

தீர்க்கதரிசனம்: 

"உன் சந்ததியின் மூலமாய் பூமியின் எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்" 
(ஆதியாகமம் 22:18).

நிறைவேற்றம்: 

இயேசுவின் மூலம் அனைத்து மக்களுக்கும் மீட்பு உண்டானது. 

♥️2. தாவீது அரசரின் வம்சாவளி (Line of David):

தீர்க்கதரிசனம்:

 "தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு கிளை முளைக்கும், நீதியுள்ள ஒரு கிளை" (ஏசாயா 11:1).

நிறைவேற்றம்: 

இயேசு தாவீதின் வம்சாவளியிலிருந்து வந்தார், அவரது வம்ச வரலாறு மத்தேயுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 (மத்தேயு 1:1). 

♥️3. கன்னிப் பிறப்பு (Virgin Birth):

தீர்க்கதரிசனம்: "கன்னி கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள், அவர் நாமம் இம்மானுவேல் என்று வழங்கப்படும்" (ஏசாயா 7:14).

யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். 
ஏசாயா 8:8

ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள், தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள், இடைக்கட்டிக் கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், 
ஏசாயா 8:9

ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும், வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது, தேவன் எங்களோடே இருக்கிறார். 
ஏசாயா 8:10

நிறைவேற்றம்: மத்தேயு 1:22-23-ன்படி, மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்து இயேசுவைப் பெற்றெடுத்தார். 

♥️4. பெத்லகேமில் பிறப்பு (Born in Bethlehem):

தீர்க்கதரிசனம்: 

"பெத்லகேம் எப்பிரத்தா, நீ யூதா கோத்திரங்களுக்குள்ளே சிறியவனாயிருந்தும், இஸ்ரவேலை ஆளுகிறவன் உன்னிலிருந்து வரவிருக்கிறான்" (மீகா 5:2).

நிறைவேற்றம்: 

இயேசு பெத்லகேமில் பிறந்தார் (லூக்கா 2:4-7). 



♥️5. எகிப்திலிருந்து திரும்ப அழைத்தல் (Return from Egypt):

தீர்க்கதரிசனம்: 

"நான் எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்"
 (ஓசியா 11:1).

நிறைவேற்றம்:

 குழந்தை இயேசுவைக் காக்க யோசேப்பு மரியாளுடன் எகிப்துக்குச் சென்று, பின்னர் இஸ்ரவேலுக்குத் திரும்பினார் (மத்தேயு 2:13-15). 



🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


1. தீர்க்கதரிசனம்: எப்படி பிறப்பார்?


அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 
மத்தேயு 1:21

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 
மத்தேயு 1:22

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 
மத்தேயு 1:23

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

2. தீர்க்கதரிசனம்: எங்கே பிறப்பார்?

எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது. 
மீகா 5:2

நிறைவேறுதல்..பெத்லகேமில்


ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 
மத்தேயு 2:1

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். 
மத்தேயு 2:2

ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 
மத்தேயு 2:3

அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து,கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். 
மத்தேயு 2:4

அதற்கு அவர்கள்,யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்,அதேனென்றால். 
மத்தேயு 2:5

யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல,என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். 
மத்தேயு 2:6

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

3. தீர்க்கதரிசனம்..எப்படி வரவழைப்பேன்?

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன், எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். 
ஓசியா 11:1

பின்பு,அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். 
மத்தேயு 2:12

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான், ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 
மத்தேயு 2:13

அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 
மத்தேயு 2:14

ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 
மத்தேயு 2:15

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

4. தீர்க்கதரிசனம்..


அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். 
மத்தேயு 2:16

புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, 
மத்தேயு 2:17

எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. 
மத்தேயு 2:18

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

5. தீர்க்கதரிசனம்..யார் இவர்?




நிறைவேறுதல்: இவர் நசரேயன்

ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: 
மத்தேயு 2:19

நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ, பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். 
மத்தேயு 2:20

அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். 
மத்தேயு 2:21

ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், 
மத்தேயு 2:22

நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 
மத்தேயு 2:23

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒



Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA