நீ எழுந்து..Ye Arise...✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
நீ எழுந்து..
Ye Arise...
✨✨✨✨✨✨✨
TCBA @ MORNDEV
✨✨✨✨✨✨✨
♥️1. நடந்து திரி....
🌺சுதந்திரி...
நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி. உனக்கு அதைத் தருவேன் என்றார். ஆதியாகமம் 13. 17
♥️2. பிள்ளையை பிடித்து கொண்டு போ..
🌺சந்ததி ஆசிர்வாதம்..
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். ஆதியாகமம் 21. 18
♥️3. தேசத்தை விட்டு புறப்படு..
🌺இனத்தார் இரட்சிப்பு..
நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே. இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். ஆதியாகமம் 31. 13
♥️4. சேனையினிடம் போ..
🌺ஜெயம்..
அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ. அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். நியாயாதிபதிகள் 7.9
♥️5. அபிஷேகம் பண்ணு..
🌺தொடர் ஊழிய தலைமத்துவம்..
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான். அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
1 சாமுவேல் 16:12
♥️6. தங்கியிரு..
🌺தேவ பராமரிப்பு..
நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றான்.
1 இராஜாக்கள் 17. 9
♥️7. எதிர்ப்பட போ
🌺தேவ சித்தத்துக்கு எதிரான கடிந்து கொள்ளல்..
கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?
2 இராஜாக்கள் 1.3
♥️8. வா...
🌺நேசர் பிரியம் பெற..
அத்திமரம் காய்காய்த்தது, திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது, என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா. உன்னதப்பாட்டு 2.13
♥️9. குயவன் வீட்டிற்குப்போ,
🌺கர்த்தர் உடைந்த உன்னை வனைய..
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ, அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
எரேமியா 18. 2
♥️10. விரோதமாய் பிரசங்கி
🌺தேசம் இரட்சிப்பை அடைய..
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். யோனா 3. 2
♥️11. படுக்கையை எடு..
🌺பாவ மன்னிப்பு..
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மத்தேயு 9.6
♥️12. போ..
🌺விசுவாசம் மற்றும் இரட்சிப்பு..
அவனை நோக்கி: நீ எழுந்துபோ,உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக்கா 17.19
♥️13. வனாந்திரமார்க்கம் செல்..
🌺தனி நபர் இரட்சிப்பு..
பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி; நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். அப்போஸ்தலர் 8.26
♥️14. பட்டணத்துக்குள்ளே போ..
🌺தேவ சித்தம் அறிந்து கொள்ள..
அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அப்போஸ்தலர் 9. 6
♥️15. கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்..
🌺பூரண இரட்சிப்பு..
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். அப்போஸ்தலர் 22.16
♥️ 16. எழும்பி..
🌺பிரகாசி..
எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
ஏசாயா 60:1
♥️17. காலுன்றிநில்..
🌺தேவ தரிசனம் பெற்றுக்கொள்..
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றிநில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்ப்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். அப்போஸ்தலர் 26.16
🌺சகோதரரே..
♥️நீ எழுந்து..
🌺 நித்தியத்தில்..
பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார். வெளிப்படுத்தினத
விசேஷம் 11. 1
✨✨✨✨✨✨✨
shalomjjj@gmail.com
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment