SHALOM STEWARD LIFEAPPLICATION TRUTHS *உங்கள் இருதயத்தை அறிந்து கொள்ளுங்கள்..* *KNOW YOUR HEART*


SHALOM STEWARD LIFE
APPLICATION TRUTHS

 *உங்கள் இருதயத்தை அறிந்து கொள்ளுங்கள்..*
 *KNOW YOUR HEART*

===========================

The most fitting Bible verse for “know your heart” is Psalm 139:23-24, which is a prayer to God, “Search me, O God, and know my heart; test me and know my anxious thoughts. See if there is any offensive path in me, and lead me in the way everlasting”.

 *Verse for Meditation..*

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரேயர் 4:12

===========================

1. *சுபாவ இருதயம்..*

 எல்லாவற்றைப்பார்க்கிலும் *இருதயமே* திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
எரேமியா 17:9

 _இது மகா கேடுள்ளது.._

2. *மனந்திரும்பாத இருதயம்..*

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத *இருதயத்திற்கும்* ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
ரோமர் 2:5

 _இது எச்சரிப்பை அசட்டை பண்ணுகிறது_ ..

3. *நருங்குண்ட இருதயம்..*

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான *இருதயத்தை* நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51:17

 _இது பாவத்தை அறிக்கையிடுகிறது_ ..

4. *திறந்துள்ள இருதயம்..*

அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் *இருதயத்தைத்* திறந்தருளினார்.
அப்போஸ்தலர் 16:14

 _இது வார்த்தையை பெற்றுக்கொள்ளுகிறது_ ..


5. *விசுவாசிக்கும் இருதயம்..*

 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் *இருதயத்திலே* விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9

 _இது கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறது_ ..

6. *குறிக்கோளுள்ள இருதயம்..*

அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் *மனநிர்ணயமாய்* நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
அப்போஸ்தலர் 11:23

 _இது கர்த்தரோடு இசைந்துள்ளது_ ..

7. *பக்குவப்படுத்தப்பட்ட இருதயம்..*

கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் *இருதயத்தைப்* பக்குவப்படுத்தியிருந்தான்.
எஸ்றா 7.10

 _இது கர்த்தருடைய கட்டளைகளால் பக்குவப்படுத்தப்படுகிறது_ ..

 *Closing thought..*

 *தீர்க்கும் இருதயம்..*

 நம்முடைய *இருதயமே* நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய *இருதயத்திலும்* பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
1 யோவான் 3.20

 _இது நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து நம்மை சரி செய்கிறது.._

shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA