கிறிஸ்துவின் உயிர்த்தலில் இரட்சிப்பின் சில முக்கிய நிகழ்வுகள்..
கிறிஸ்துவின் உயிர்த்தலில்
இரட்சிப்பின் சில முக்கிய நிகழ்வுகள்..
🙏1. ஆரோனின் கோல் துளிர்த்தல்..எண் 17:5-8
@ தெரிந்து கொள்ளுதல்
🙏2. ஒலிவஇலை துளிர்த்தல்..
ஆதி 7:22, 8:11
@ ஜெனிப்பித்தல்
🙏3.உயிருள்ள குருவி பறக்க விடுதல்..லேவி 14:7
@ சுத்திகரிப்பு
🙏4. அறுப்பின் முதற் பலன்..
லேவி 23:10
@ ஆராதனை
🙏5. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை..
எபி 11:18-19, ஆதி 22:5, 19,22
@ வானவருடைய சாயல்
1 கொரி 15: 45-49
🙏6 அழியாமை.. ஜீவன்...
அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
யாத்திராகமம் 3:2
3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.
யாத்திராகமம் 3:3
4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
யாத்திராகமம் 3:4
16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
உபாகமம் 33:16
26 மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?
மாற்கு 12:26
37 அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
லூக்கா 20:37
30 நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
அப்போஸ்தலர் 7:30
35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
அப்போஸ்தலர் 7:35
++++++++++++++++++++++++
சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான். அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.
அப்போஸ்தலர் 2:29
அவன் தீர்கதரிசியாயிருந்து; உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,
அப்போஸ்தலர் 2:30
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான்.
அப்போஸ்தலர் 2:31
இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார், இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
அப்போஸ்தலர் 2:32
அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
அப்போஸ்தலர் 2:33
தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடு;ம் வரைக்கும்,
அப்போஸ்தலர் 2:34
நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
அப்போஸ்தலர் 2:35
ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
அப்போஸ்தலர் 2:36
God Bless Resurrection Remembrance of The Lord Jesus Christ
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
Comments
Post a Comment