சபையின் உருவகங்கள்..01/15 சபை சத்திரத்திற்கு உருவகம்..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி..
சபைக்கு செய்தி..
சபையின் உருவகங்கள்..01/15
1. சபை சத்திரத்திற்கு உருவகம்..
வாசியுங்கள் : லுக் 10.25-37
தியான வசனம் :
" நீ இவனை விசாரித்துக்கொள்"..
TAKE CARE OF HIM.
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து *: நீ இவனை விசாரித்துக்கொள்,* அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
லூக்கா 10:35
@ சபையில் ஒருவரை ஒருவர் விசாரித்தல், கவனித்தல், புத்தி சொல்லுதல் தவிர்க்க கூடாதது..
1. *சபையில் விசாரித்தல் பிரதானமான பணி ஆகும்..*
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி *விசாரிப்பான்* ?
1 தீமோத்தேயு 3. 5
2. *சபையில் விசாரித்தலை சபை குடும்பங்கள் எதிர் பார்க்கிறார்கள்..*
என்னை *விசாரிப்பதற்கு* நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
பிலிப்பியர் 4. 10
அவன் சுகமாயிருக்கிறானா என்று *விசாரித்தான்* . அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான். அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
ஆதியாகமம் 29.10
3. *கர்த்தர் உங்களை விசாரிக்கிறார்..*
அவர் உங்களை *விசாரிக்கிறவரானபடியால்* , உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
4. *விசாரிப்பது தேவ பக்தி..*
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை *விசாரிக்கிறதும்* , உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1:27
5. *விசாரிக்காமல் அலட்சியம் பண்ணுதல் அவிசுவாசத்திற்கு அடையாளம்..*
ஒருவன் தன் சொந்த ஐனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் *விசாரியாமற்போனால்* , அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
1 தீமோத்தேயு 5:8
6. *விசாரிக்குமுன் நிருணயம் பண்ணுவது தவறு..*
நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், *விசாரிக்குமுன்* நிருணயம் பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.
1 தீமோத்தேயு 5:21
7. *விசாரிப்பதில் தீமோத்தேயு முன்மாதிரி..*
அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் *விசாரிக்கிறதற்கு* என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.
பிலிப்பியர் 2:20
சகோதரரே..
*சபையின் பொறுப்புள்ளவர்கள் விசாரித்தல் முறைமை ..*
*ஏற்ற வேளையும் போஜனமும்..*
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை *விசாரிக்கும்படி* எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
மத்தேயு 24. 45
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment