ஆட்டுக்குட்டியானவரும் ஆராதனையும்... மேஜை நினைவு கூறுதல் தியானம்
மேஜை நினைவு கூறுதல் தியானம்
ஆட்டுக்குட்டியானவரும் ஆராதனையும்...
ஆராதனை நித்தியத்திற்குறியது..
இங்கே நாம் செய்கிற ஆராதனை நிழல்..
நிஜம் கர்த்தர்..
1. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி..
LAMB 🐑 THAT WAS SLAINED..
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
வெளிப்படுத்தினத விசேஷம் 5:6
2. தம்மில் தாமே அதிகாரம் உள்ள ஆட்டுக்குட்டியானவர்..
LAMB HAVING POWER IN HIMSELF
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
வெளிப்படுத்தினத விசேஷம் 5:7
3.
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
வெளிப்படுத்தினத விசேஷம் 5:8
4. கனத்திற்கு பாத்திரரர் ஆட்டுக்குட்டியானவர்..
LAMB 🐑 WORTHY FOR HONOUR..
அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
வெளிப்படுத்தினத விசேஷம் 5:12
5. நித்திய ஆட்டுக்குட்டியானவர்..
ETERNAL LAMB 🐑
அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 5:13
6.
1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 6:1
16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்,
வெளிப்படுத்தினத விசேஷம் 6:16
29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29
36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
யோவான் 1:36
8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள்யாவரும் அதை வணங்குவார்கள்.
வெளிப்படுத்தினத விசேஷம் 13
19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1:19
20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.
1 பேதுரு 1:20
186. ஆட்டுக் குட்டியின் திரு இரத்தத்தினால்
1. ஆட்டுக் குட்டியின் திரு
இரத்தத்தினால்
மீட்டுக் கொள்ளப்பட்டவர்
யாவருமே,
பாட்டுடன் சேர்ந்து, தேவ
சந்நிதியில்,
அல்லேலூயா ஸ்தோத்ரம்!
- நாம் பாடிடுவோம்
2. இரத்தத்தினால் தைரியமாய்
நமக்கு
பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க
இரட்சகர் வழியைத்
திறந்ததினால்
அல்லேலூயா ஸ்தோத்ரம்!
- நாம் பாடிடுவோம்.
3. சாத்தான் மேல் ஜெயமும் திரு
இரத்தத்தால்
பாவத்திலிருந்து விடுதலையும்,
சுத்தாங்கமும் நமக்கு
உள்ளதினால்
அல்லேலூயா ஸ்தோத்ரம்;!
- நாம் பாடிடுவோம்.
4. கேருபின், சேராபீன்கள்
போற்றுவோரை
பரிசுத்தரை நாமும்
போற்றிடுவோம்,
சர்வ சிருஷ்டி கர்த்தாவாம்
திரியேகர்க்கு
அல்லேலூயா ஸ்தோத்ரம்!
- நாம் பாடிடுவோம்.
5. ஆவியின் பிதாவுக்கு மகத்துவம்,
ஆட்டுக் குட்டியானவர்க்கு
மகத்துவம்
ஆட்கொண்ட தேவாவிக்கு
மகத்துவம்,
அல்லேலூயா ஸ்தோத்ரம்!
- நாம் பாடிடுவோம்.
whatsapp 91 9965050301
Comments
Post a Comment