வருகிறவர்..* SHALOM GOSPEL MOMENTS ஷாலோம் சுவிஷேச மணித்துளிகள்
SHALOM GOSPEL MOMENTS
ஷாலோம் சுவிஷேச மணித்துளிகள்
*வருகிறவர்..*
என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்*
இந்த பாடலை கேளுங்கள்
பின் செய்தியை வாசியுங்கள்
ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1uoOAcrtARHl3awRwtd8khc-JNybwl9TV/view?usp=sharing
*என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்*
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே *வாரும்* !
*தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும்* (2)
என் உள்ளம் இன்றே வாரும்!
முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
*கருத்தூட்டும் இரட்சகனே*
என் உடல் சக்தி கல்வி செல்வம் சுகம்
காணிக்கை ஏற்றருளும்
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்..
வருகிறவர்..
*Strong's g2064*
*erchomai*
- Lexical: ἔρχομαι
- Transliteration: erchomai
- Part of Speech: Verb
- Phonetic Spelling: er'-khom-ahee
- Definition: to come, go.
- Origin: Middle voice of a primary verb (used only in the present and imperfect tenses, the others being supplied by a kindred (middle voice) eleuthomai el-yoo'-thom-ahee, or (active) eltho el'-tho, which do not otherwise occur) *to come or go* (in a great variety of applications, literally and figuratively).
================================
" *வருகிறவர்* " என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் மிக பிரதானமான நாமம் ஆகும்..
அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: *வருகிறவர் நீர்தானா?* அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
லூக்கா 7.20
" *ஸ்தோத்திரிக்கப்பட்டவர்* " என்பது தேவனுடைய நாமங்களில் பிரதானமான நாமம் ஆகும்.
ஆகவே தான் இயேசு கிறிஸ்து தேவன் என்பதை ஊர்ஜிதம் செய்யும்படியாக பிரதான ஆசாரியன் இயேசுகிறிஸ்துவிடம் விசாரிப்பதை கவனியுங்கள்..
அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் *வருவதையும்* நீங்கள் காண்பீர்கள் என்றார்.
மாற்கு 14:60-62
================================
*வருகிறவர்* ..
*இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை..
First Advent..*
In his first advent, Christ came in the weakness of infancy to become the Suffering Servant of those who were hopelessly lost; in his second advent, he will come as the sovereign King of Kings and Lord of Lords.
1. கர்த்தருடைய நாமத்தினாலே *வருகிறவர்*.. தீர்க்கதரிசனம்..
கர்த்தருடைய நாமத்தினாலே *வருகிறவர்* ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.சங் 118.26
2. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் *வருகிறார்* ..
சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் *வருகிறார்* . அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி *வருகிறவருமாயிருக்கிறார்*.
சகரியா 9.9
3. உன்னதத்திலிருந்து *வருகிறவர்*..
உன்னதத்திலிருந்து *வருகிறவர்* எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்:
பரலோகத்திலிருந்து *வருகிறவர்*
பரலோகத்திலிருந்து *வருகிறவர்* எல்லாரிலும் மேலானவர்.யோ 3.31
4. *சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவன்..*
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய *சர்வவல்லமையுள்ள கர்த்தர்:* நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
வெளி 1.8
5. *கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர்* நிறைவேறுதல்..
முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! *கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர்* ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.
மாற்கு 11.9
6. : *எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர்,*
யோவான் ஸ்னானகன் சாட்சி..
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: *எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர்,* ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
யோவான் 1.15
7. *வருகிறவர் நீர்தானா?*
யோவான் ஸ்னானகன் சந்தேகம்..
அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: *வருகிறவர் நீர்தானா?* அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
லூக்கா 7.20
================================
*இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.. Second Advent..*
1. *வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்*
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் *வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 4.8
2. *வருகிறவர் ராஜ்யபாரம் பண்ணுகிறவர்..*
இருக்கிறவரும் இருந்தவரும் *வருகிறவருமாகிய* சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
வெளி 11.17
3. *வருகிறவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்* ..
யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
வெளி 1.4
*_Closing thought.._*
*வருகிறவர்* இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
எபிரேயர் 10.37.. *ஷாலோம்*
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment