முதல் ஆதாம் 7 சாபங்களும் ... கடைசி ஆதாம் 7 சாப நிவிர்த்தியும் ..TABLE REMEMBRANCE THOUGHT
மேஜை நினைவு கூறுதல் தியானம்
*TABLE REMEMBRANCE THOUGHT*
கிறிஸ்து வேறோருவரோடும் ஒப்பிட முடியாது..
ஆனால் வேதம் அவரை சில இடங்களில் ஒப்புமைப்படுத்துகிறது..
மெல்கிசெதேக்கு இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
எபிரேயர் 7:3
நாம் கிறிஸ்துவை வேறே வேத மனிதர்களோடு அல்லது சில நிகழ்வுகளோடு ஓப்பிடும் போது மிகவும் கவனத்துடன் இந்த விஷயங்களை கையாட வேண்டும்.
முதல் ஆதாம்... இரண்டாம் ஆதாம்..
ஆதாம்..vs பின்பு வந்தவர்.. ( கிறிஸ்து)
அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ரோமர் 5.14
முந்தின ஆதாம்..vs பிந்தின ஆதாம்.. ( கிறிஸ்து)
அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
1 கொரிந்தியர் 15.45
முந்தின மனுஷன்..vs இரண்டாம் மனுஷன் ( கிறிஸ்து )
முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
1 கொரிந்தியர் 15.47
*7 சாபங்கள் முதல் ஆதாம் மேல்..*
( கீழ்ப்படியாமை)
*7 சாபங்கள் இரண்டாம் ஆதாம் மேல்..*
( கீழ்ப்படிதல்)
*1. வேர்வை..*
_Sweat_ ..
_முதல் ஆதாம்.._
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் *வேர்வையால்* ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
ஆதியாகமம் 3:19
_இரண்டாம் ஆதாம்.._
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய *வேர்வை* இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
லூக்கா 22:44
*2. முள்..*
_Thorn_ ..
_முதல் ஆதாம்.._
அது உனக்கு *முள்ளும்* குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
ஆதியாகமம் 3:18
_இரண்டாம் ஆதாம்.._
போர்ச்சேவகர் *முள்ளுகளினால்* ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
யோவான் 19:2
*3. சாபம்..*
_Curse_ ..
_முதல் ஆதாம்.._
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் *சபிக்கப்பட்டிருக்கும்* . நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
ஆதியாகமம் 3:17
_இரண்டாம் ஆதாம்.._
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் *சபிக்கப்பட்டவன்* என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:13
*_4. வருத்தம்.._*
_Sorrow_ ..
_முதல் ஆதாம்.._
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் *வருத்தத்தோடே* அதின் பலனைப் புசிப்பாய்.
ஆதியாகமம் 3:17
_இரண்டாம் ஆதாம்.._
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் *துக்கத்துக்குச்* சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
புலம்பல் 1:12
*5. நசுக்குதல்..*
_Bruise_ ..
_முதல் ஆதாம்.._
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை *நசுக்குவாய்* என்றார்.
ஆதியாகமம் 3:15
_இரண்டாம் ஆதாம்.._
கர்த்தரோ அவரை *நொறுக்கச்சித்தமாகி* , அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
ஏசாயா 53:10
*6. பட்டயம்..*
_Sword_ ..
_முதல் ஆதாம்.._
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி *பட்டயத்தையும்* வைத்தார்.
ஆதியாகமம் 3:24
_இரண்டாம் ஆதாம்.._
*பட்டயமே* , என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும். ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
சகரியா 13:7
7. *மண்.. மரண தூள்* ..
_Dust_ ..
_முதல் ஆதாம்.._
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், *மண்ணுக்குத்* திரும்புவாய் என்றார்.
ஆதியாகமம் 3:19
_இரண்டாம் ஆதாம்.._
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது, என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது, என்னை *மரணத்தூளிலே* போடுகிறீர்.
சங்கீதம் 22:15
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505301
Comments
Post a Comment