இயேசுவானவர் எப்பொழுதும் (உயிரோடு) இருக்கிறவராகையால்...* *Christ Ever available..* சபைக்கு செய்தி




 *இயேசுவானவர் எப்பொழுதும் (உயிரோடு) இருக்கிறவராகையால்...* நீங்களும்...

 *Christ Ever available..* so you also..


 *Key verse..* 

மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு *அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால்* அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்
எபிரேயர் 7:25


 *Christ as Light..* 

1. குத்துவிளக்கு *எப்பொழுதும்* எரிந்துகொண்டிருக்கும்.

குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.
யாத்திராகமம் 27.20


 *Christ as intercessor...* 

2. நாமங்களைத் தன் இருதயத்தின்மேல் *எப்பொழுதும்* தரித்துக் கொண்டிருக்கிறார்.. 

ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.
யாத்திராகமம் 28


 *Christ as Law giver..* 

3.நியாயவிதியை *எப்பொழுதும்* தரித்துக்கொண்டிருக்கிறார்.. 

நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக. ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும். ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.
யாத்திராகமம் 28.30


 *Christ as Sanctifier..* 

4.பரிசுத்தமானவைகளின் தோஷம் *எப்பொழுதும்* அவன் நெற்றியின்மேல் இருக்கவேண்டும்...

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக. கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 28


 *Christ as Purifier.* 

5.அக்கினி *எப்பொழுதும்* எரிந்துகொண்டிருக்கவேண்டும்..

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும், அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
லேவியராகமம் 6.13

 *Christ as Spirit of God..* 

6. ஒலிவ எண்ணெயை *எப்பொழுதும்* ஆயத்தமாயிருக்க வேண்டும்.. 

குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
லேவியராகமம் 24


 *Christ as water of life..* 

7.வெண்கல தொட்டியில் *எப்பொழுதும்* தண்ணீர் ஊற்ற வேண்டும்.. 

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள். 
யாத்திராகமம் 30:20


 *Christ as Bread of life..* 

8. மேஜையின்மேல் *நித்தமும்* சமுகத்தப்பங்களை வைக்க வேண்டும்.

மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
யாத்திராகமம் 25.30


 *Christ as Glory..* 

9. மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் *விலகவில்லை* ..

நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை. அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை
நெகேமியா 9:19


 *சகோதரரே* .. 
அவர் எப்பொழுதும் வுயிரோடு இருக்கிற படியால் நாமும் எப்பொழுதும்..

 *Believers as Obedient* 

1. *எப்பொழுதும்* கைக்கொள்வாயாக...

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
உபாகமம் 11.30

 *Believers as Offerers* .

2. ஸ்தோத்திரபலியை
 *எப்போதும்* செலுத்தக்கடவோம்..

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 
எபிரேயர் 13:15

 *Believers as Seekers..* 

3. சமுகத்தை *நித்தமும்* தேடுங்கள்..

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
சங்கீதம் 105

 *Believers as Fearers..* 

4. *நாடோறும்* கர்த்தரைப பற்றும் பயத்தோடிரு..

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே: நீ நாடோறும் கர்த்தரைப பற்றும் பயத்தோடிரு.
நீதிமொழிகள் 23.17


 *Thought provoke..* 
 *சிந்தனைக்கு* 

 *நித்தமும் உன்னை நடத்துவார்..* 

கர்த்தர் *நித்தமும்* உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
ஏசாயா 58.17

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
meetshalomsteward@gmail.com
Whatsapp:+919965050301

https://chat.whatsapp.com/LBNKJHGYhEvJpeFD4XFEd8

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA