இயேசு கிறிஸ்துவைக்குறித்த சாட்சிகளும்.. நம்மைக்குறித்த ( பவுல் ) சாட்சிகளும்..சபைக்கு செய்தி




 *இயேசு கிறிஸ்துவைக் குறித்த சாட்சிகளும்.. நம்மைக் குறித்த ( பவுல் ) சாட்சிகளும்..* 

 _ஒரு ஒப்புமை தியானம்_ .. 

"சாட்சி " என்கிற வார்த்தை சட்ட பூர்வமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.. 

சாட்சி vs வேதம்..

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும், இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
ஏசாயா 8.20

 _யோவான் சுவிசேஷத்தின் மேன்மை.._ 
  
 _தியான கேள்வி.._  

அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். 
யோவான் 8:13

 _கிறிஸ்துவின் பதில்.._ 

 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
யோவான் 5.31


 1 _இயேசு கிறிஸ்துவைக் குறித்த சுய சாட்சி.._ 

. _நானே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்_ .. 

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன், நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
யோவான் 8.14

 _நம்முடைய சுய சாட்சி.._ 

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. 
ரோமர் 9:2


2. _இயேசு கிறிஸ்துவைக் குறித்த பிறர் சாட்சி.._ 

_யோவான் ஸ்னானகன்.._ 

 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்
அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்
யோவான் 1:8

 _நம்மைக்குறித்த பிறர் சாட்சி.._ 

விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 
1 தெசலோனிக்கேயர் 2:10


3. _இயேசு கிறிஸ்துவைக் குறித்த பிதாவின் சாட்சி_ .. 

என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. 
யோவான் 5:37

 _நம்மைக்குறித்த பிதாவின் சாட்சி.._ 

 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை. அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 
2 கொரிந்தியர் 1:18


4. _இயேசுகிறிஸ்துவைக் குறித்த வேதவாக்கியங்கள் சாட்சி.._ 

 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 
யோவான் 5:39

 _நம்மைக்குறித்த நம் வார்த்தைகள் சாட்சி.._ 

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 
2 கொரிந்தியர் 4:2


5. _இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஆவியானவர் சாட்சி_ .. 

 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 
யோவான் 15:26

 _நம்மைக்குறித்த ஆவியானவர் சாட்சி.._ 

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். 
ரோமர் 8:16

6. _இயேசுகிறிஸ்துவைக் குறித்த சீஷர்கள் சாட்சி.._ 

 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். 
யோவான் 15:27

 _நம்மைக்குறித்த அநேக சாட்சி.._ 

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 
1 தீமோத்தேயு 6:12

 _கடைசியாக சகோதரரே.._ 

 _பரலோகத்தில் என் சாட்சி.._ 

 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
யோபு 16.19


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301


https://chat.whatsapp.com/G7H65mRnXyq8iSbd89vcpj

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA