மேஜை நினைவு கூறுதல் தியானம்.. பலிபீடத்து கொம்புகள்..


 *பலிபீடத்தின் கொம்புகள்..* 

கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் *பலிபீடத்தின் கொம்புகளில்* கயிறுகளால் கட்டுங்கள். 
சங்கீதம் 118:27


1. _பாவங்கள் பலிபீடத்தின் கொம்புகளில் பதிந்திருக்கிறது_ .. 

 யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் *உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.* 
எரேமியா 17:1

2. _கொம்புகளில் சிக்கிக்கொண்ட ஆடு நம் பாவபரிகாரத்திற்கு நிழல்.._ 

 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் *கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக்* கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். 
ஆதியாகமம் 22:13

3. _பலிபீடத்தின் கொம்புகள் அடைக்கலத்திற்கு உருவகமாக விளங்குகிறது_ .. 

அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். 
1 இராஜாக்கள் 1:50

இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் *பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு* , ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது. 
1 இராஜாக்கள் 1:51

4. _பலிபீடத்து கொம்புகளில் ரத்தம் தெளிக்கப்பட வேண்டும்_ .. 

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் *பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு* , மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, 
யாத்திராகமம் 29:12

5. _பலிபீடத்து கொம்புகளில் பிராயசித்தம் செய்ய வேண்டும்._

வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் *கொம்புகளின்மேல்* *பிராயச்சித்தம்பண்ணுவானாக* . உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக. அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார். 
யாத்திராகமம் 30:10

6. _இரட்சணிய கொம்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்_ .. 

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் *ரட்சணியக் கொம்பும்* , என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர். என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே. 
2 சாமுவேல் 22:3

7. _இரட்சணிய கொம்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிஜம்_

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் *கேடகமும்* , என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். 
சங்கீதம் 18:2

8. _பலிபீடத்து கொம்புகளில் பதிந்திருந்த கையெழுத்தை குலைத்தார்.._ 

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, 
கொலோசெயர் 2:14

 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார். 
கொலோசெயர் 2:15

 *ஆராதனை சிந்தை..

கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் *பலிபீடத்தின் கொம்புகளில்* கயிறுகளால் கட்டுங்கள். 
சங்கீதம் 118:27

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
whatsapp: +91 9965050301 

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA