ஒரே நிகழ்வு....ஒருவர்க்கு இரட்சிப்பு .. மற்றவர்க்கு நியாயத்தீர்ப்பு* ..
வேதம் உலக மக்களையே இரண்டு பிரிவுகளாக மட்டுமே காண்கிறது..
சிலுவை மரணம் உலக மக்களையே இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரிக்கிறது..
*ஒரே நிகழ்வு..*
*ஒருவர்க்கு இரட்சிப்பு ..*
*மற்றவர்க்கு நியாயத்தீர்ப்பு* ..
*Single Event..*
*Salvation for one..*
*Judgement for another..*
தியான வசனம்
ஓன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
யோபு 37.13
_இஸ்ரவேலருக்கு_ ..
1. *செங்கடல்* ..
_இஸ்ரவேலருக்கு தப்புவிக்க பாதை.._
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் *சமுத்திரம்* ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
யாத்திராகமம் 14:21-22
_எகிப்தியர்க்கு அழிவின் பாதை.._
அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே *சமுத்திரத்தின்* நடுவே பிரவேசித்தார்கள்.
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது. எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார்.
யாத்திராகமம் 14:23, 27
2. *வானம்* ..
_இஸ்ரவேலருக்கு மன்னா.._
மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, *வானத்தின்* தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான், அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.
சங்கீதம் 78:24, 25
_எமோரியர்க்கு கல்மழை.._
அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் *வானத்திலிருந்து* பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
யோசுவா 10:11
3. *மேகஸ்தம்பம்* ..
_இஸ்ரவேலருக்கு வெளிச்சம்.._
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த *மேக ஸ்தம்பமும்* விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
யாத்திராகமம் 14:19-20
_எகிப்தியர்க்கு அந்தகாரம்._ .
யாத் 14.19-20
4. *ஜலப்பிரளயம்* ..
_நோவாவின் குடும்பத்தார் காக்கப்பட்டார்கள்_ ..
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் *பேழையிலே* சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1 பேதுரு 3:20
_கீழ்ப்படியாதவர்களுக்கு அழிவு.._
மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு *நிக்கிரகமாயின* . நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
ஆதியாகமம் 7:23
5. *உடன்படிக்கை பெட்டி..*
_ஓபேத் ஏதோம் வீட்டாருக்கு ஆசிர்வாதம்_ ..
*பெட்டியைத்* தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.
தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
1 நாளாகமம் 13:13-14
_பெலிஸ்தியர்க்கு கொள்ளை நோய்.._
பெலிஸ்தர் தேவனுடைய *பெட்டியைப்* பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து தாகோனண்டையிலே வைத்தார்கள். செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.
1 சாமுவேல் 5:12
-------------------------------------------
_உலகம் அனைத்திற்கும்_ ..
1. *_கிறிஸ்துவின் சிலுவை மரணம்_* ..
_ஒரு பக்கத்து கள்ளனுக்கு பரதீசு_ ..
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
மறு பக்க கள்ளனுக்கு நரகம்
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
லூக்கா 23:39
2. *கிறிஸ்துவின் சிலுவை உபதேசம்* ..
_இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலன்_ ..
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 1:18
_கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம்_ ..
1 கொரிந்தியர் 1:18
*Closing thought..*
*கர்த்தருடைய வார்த்தை.* .
_கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவ அன்பு பூரணம்_ ..
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 2:5
_கீழ்ப்படியாதவர்களுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு_ .
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
யோவான் 12.48
coutresy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment